பிரித்தானியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் : 17 வயதுடைய மாணவர் ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
பிரித்தானியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் : 17 வயதுடைய மாணவர் ஒருவர் கைது!

பிரித்தானியாவில் நேற்று (30.04) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வடகிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட், டியூப் ஸ்டேஷன் அருகே நடந்த தாக்குதலில் 13 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் முன்னதாக 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது 17 வயதுடைய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.