தியாகேந்திரன் வாமதேவ அவர்களினால் இன்று பல மில்லியன் ரூபாயில் வாழ்வாதர உதவிகள் வழங்கி வைப்பு!
#SriLanka
#Jaffna
#Thiyagendran Vamadeva
Mayoorikka
1 week ago
தியாகி அறக்கொடை நிறுவனர் தியாகேந்திரன் வாமதேவ அவர்களினால் இனறைய தினம் நலிவுற்ற பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு பண உதவிகள் மற்றும் உணவுப் பொதிகள் வழங்கிக வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியிலிருந்து குறித்த உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் பல வறிய மக்கள் வருகை தந்து உதவிகளை பெற்றுச் செல்கின்றனர்.
இன்றைய தினம் பாடசாலை செல்லவும் மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் நோயாளிகள் என பலரும் கலந்து கொண்டு உதவிகளை பெற்றுச் சென்றுள்ளனர்.
இந்த உதவிகள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்து TCT வளாகத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.