இரு முக்கிய சட்டமூலங்கள் அமுலுக்கு வந்துள்ளன : பாராளுமன்றம் அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) மற்றும் பெறுமதி சேர் வரி (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு சபாநாயகர் நேற்று (20) தனது சான்றிதழை பதிவு செய்தார்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) ஆகிய சட்டமூலங்கள் அமுலுக்கு வருவதாகபாராளுமன்றம் அறிவித்துள்ளது