அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

#SriLanka #Mannar #Power #Project #adani #Wind
Prasu
1 month ago
அதானி குழுமத்தின் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

மன்னாரில் தான் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள காற்றாலை மின்திட்டத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் இடம்பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

உள்நோக்கம் கொண்ட சக்திகள் மன்னாரில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள 250 மொகவோட் காற்றாலை மின்திட்டத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன என அதானி குழுமத்தின் பேச்சாளர் எக்கனமிநெக்ஸ்ட் இணையத்தளத்திற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காற்றாலையை அமைப்பதற்கான இடத்தை மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகே தெரிவுசெய்ததாக தெரிவித்துள்ள அவர் பறவைகளின் பறக்கும் பாதையில் விசையாழிகள் அமைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பேண்தகுஎரிசக்தி அதிகாரசபை பறவைகள் மற்றும் வெளவால்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது கொழும்பு பல்கலைகழகத்தின் விலங்கியல் மற்றும் சூழல் விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட பேராசிரியர் தேவகவீரக்கோன் தலைமையில் இந்த ஆராய்ச்சி இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் இலங்கை பறவைகள் சங்கம் போன்ற அமைப்புகளின் தரவுகளை ஆராய்ந்த பின்னரே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது எனவும் அதானி குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுற்றுசூழல் பாதிப்பை குறைப்பதற்காக காற்றாலை திட்டத்தை முன்னெடுப்பவருக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம் அதனைமுழுமையாக பின்பற்றுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் சுற்றுசூழல் பாதிப்பை தவிர்ப்பதற்காகவும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இந்த திட்டத்தினை பூர்த்தி செய்வதற்காகவும் நாங்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 பறவைகளை இனம் காண செயற்கை தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் ஆபத்தான தருணத்தில் டேர்பைன்கள் நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.